ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர் / Oivunaal Vinnil Kondaadugindror / Oivunaal Vinnil Kondaadukindror / Oivunal Vinnil Kondadugindror / Oivunal Vinnil Kondadukindror
1
ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்
பேரின்ப மேன்மை யார் கூற வல்லோர்
வீரர்க்கு கிரீடம் தொய்ந்தோர் சுகிப்பார்
ஸ்வாமியே யாவிலும் யாவும் ஆவார்
2
ராஜ சிங்காசன மாட்சிமையும்
ஆங்குள்ளோர் வாழ்வும் சமாதானமும்
இவை எல்லாம் கண்டறிந்தோரில் யார்
அவ்வண்ணம் மாந்தர்க்கு நன்குரைப்பார்
3
மெய் சமாதானத் தரிசனமாம்
அக்கரை எருசலேம் என்போம் நாம்
ஆசிக்கும் நன்மை கைகூடும் அங்கே
வேண்டுதல் ஓர்காலும் வீண் ஆகாதே
4
சீயோனின் கீதத்தைப் பாடாதங்கும்
தடுக்க ஏலுமோ எத்தொல்லையும்
பேரருள் ஈந்திடும் ஆண்டவா நீர்
பக்தரின் ஸ்தோத்திரம் என்றும் ஏற்பீர்
5
ஆங்குள்ளோர் ஓய்வுநாள் நித்தியமாம்
விடிதல் முடிதல் இல்லாததாம்
தூதரும் பக்தரும் ஓயாமலே
ஓர் ஜெய கீர்த்தனம் பாடுவாரே
6
பாபிலோன் போன்ற இப்பாரின் சிறை
மீண்டு நம் தேசம் போய்ச் சேரும்வரை
எருசலேமை நாம் இப்பொழுதும்
வாஞ்சித்து ஏங்கித் தவித்திடுவோம்
7
தந்தையினாலும் குமாரனிலும்
ஆவியின் மூலமும் யாவும் ஆகும்
திரியேக தெய்வத்தை விண் மண்ணுள்ளார்
சாஷ்டாங்கமாய் வீழ்ந்து வாழ்த்திடுவார்