என் மேய்ப்பர் இயேசுகிறிஸ்துதான் / En Meippar YesuKristhudhaan / En Meippar YesuKristhuthaan / En Meippar YesuKristhudhan / En Meippar YesuKristhuthan
1
என் மேய்ப்பர் இயேசுகிறிஸ்துதான்
நான் தாழ்ச்சியடையேனே
ஆட்கொண்டோர் சொந்தமான நான்
குறையடைகிலேனே
2
ஜீவாற்றில் ஓடும் தண்ணீரால்
என் ஆத்மத் தாகம் தீர்ப்பார்
மெய்மன்னாவாம் தம் வார்த்தையால்
நல் மேய்ச்சல் எனக்கீவார்
3
நான் பாதை விட்டு ஓடுங்கால்
அன்பாகத் தேடிப் பார்ப்பார்
தோள்மீதில் ஏற்றிக் காப்பதால்
மகா சந்தோஷங் கொள்வார்
4
சா நிழல் பள்ளத்தாக்கிலே
நான் போக நேரிட்டாலும்
உன் அன்பின் கோலைப் பற்றவே
அதே என் வழிகாட்டும்
5
இவ்வேழைக்கும் ஓர் பந்தியை
பகைஞர்க்கெதிர் வைத்தீர்
உம்மாவியால் என் சிரசை
தைலா பிஷேகஞ் செய்வீர்
6
என் ஆயுள் எல்லாம் என் பாத்ரம்
நிரம்பி வழிந்தோடும்
ஜீவாற்றின் நீரால் என்னுள்ளம்
நிறைந்து பொங்கிப்பாயும்
7
என் ஜீவ காலம் முற்றிலும்
கடாட்சம் பெற்று வாழ்வேன்
கர்த்தாவின் வீட்டில் என்றைக்கும்
நான் தங்கிப் பூரிப்பாவேன்