மனமே நீ கலங்காதே | Maname Nee Kalangathe / Maname Nee Kalangadhe

மனமே நீ கலங்காதே | Maname Nee Kalangathe / Maname Nee Kalangadhe

விழியே கலங்காதே
விடியும் திகையாதே
மனதின் வலி மெய் தானே
மறையும் சோராதே

கண்ணீரையும் அவர் காண்பாரே
மனதுருகி அருகே வருவாரே
தோளின் மேலே உன்னை சாய்ப்பாரே
உன்னை மூடி மறைப்பாரே

மனமே நீ கலங்காதே
விடியும் திகையாதே
உயிரே என்பாரே
உதவி செய்வாரே

1
கண்ணீரால் இரவுகளை
கடந்தாயோ உடைந்தாயோ
தனிமையில் துணையில்லையே
என்றாயோ ஏங்கினாயோ

கண்ணீர் துடைத்திடுவாரே
கவலை மாற்றிடுவாரே
விலகாத நிழல் அவர் தானே
பாதை திறந்திடுவாரே

2
பிறர் சொல்லும் வார்த்தைகளால்
இடிந்தாயோ சரிந்தாயோ
தீராதா சுமைகளினால்
அமிழ்ந்தாயோ புதைந்தாயோ

சுமையை நீ சுமக்காதே
சுமக்க அவர் இருக்காரே
மகனே என்றழைப்பாரே
இறுக அணைத்துக்கொள்வாரே

மனமே நீ கலங்காதே
விடியும் திகையாதே
உயிரே என்பாரே
உதவி செய்வாரே

மனமே நீ கலங்காதே | Maname Nee Kalangathe / Maname Nee Kalangadhe | Isaac D. | Isaac D., Miracline Betty

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!