காலத்தின் அருமையை அறிந்து / Kaalathin Arumaiyai Arindhu / Kaalathin Arumaiyai Arinthu
காலத்தின் அருமையை அறிந்து
வாழாவிடில் கண்ணீர் விடுவாயே
ஞாலத்தில் பரனுன்னை நாட்டின நோக்கத்தை
சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய்
1
மதியை இழந்து தீய வழியிலே நீ நடந்தால்
வருங்கோபம் அறிந்திடாயோ
கதியாம் ரட்சண்ய வாழ்வை நீ கண்டு மகிழ்ந்திட
காலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ
காலத்தின் அருமையை அறிந்து
வாழாவிடில் கண்ணீர் விடுவாயே
2
நோவாவின் காலத்தில் நூற்றிருபது ஆண்டு
நோக்கிப்பின் அழித்தாரன்றோ
தாவாத கிருபையால் தாங்கி உனக்களித்த
தவணையின் காலமிவ் வருட முடியலாமே
காலத்தின் அருமையை அறிந்து
வாழாவிடில் கண்ணீர் விடுவாயே
3
முந்தின எரேமியா அனனியாவுக் குரைத்த
முடிவை நீ அறியாயோ
எந்தக் காலமும் சிரஞ்சீவி யென்றெண்ணிடாமல்
ஏற்ற ஆயத்தமாய் எப்போதும் இருந்திடாயோ
காலத்தின் அருமையை அறிந்து
வாழாவிடில் கண்ணீர் விடுவாயே
4
இகத்தினில் ஊழியம் அகத்தினில் நிறைவேற
யேசுனை அழைத்தாரல்லோ
மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால்
பகற்கால முடியும் ராக்காலத்திலென்ன செய்வாய்
காலத்தின் அருமையை அறிந்து
வாழாவிடில் கண்ணீர் விடுவாயே
Like this? Leave your thoughts below...