இந்நாள் வரைக்கும் கர்த்தரே / Innaal Varaikkum Karththare

இந்நாள் வரைக்கும் கர்த்தரே / Innaal Varaikkum Karththare

1   
இந்நாள் வரைக்கும் கர்த்தரே
என்னைத் தற்காத்து வந்தீரே
உமக்குத் துதி ஸ்தோத்திரம்
செய்கின்றதே என் ஆத்துமம்

2   
ராஜாக்களுக்கு ராஜாவே
உமது செட்டைகளிலே
என்னை அணைத்துச் சேர்த்திடும்
இரக்கமாகக் காத்திடும்

3   
கர்த்தாவே இயேசு மூலமாய்
உம்மோடு சமாதானமாய்
அமர்ந்து தூங்கும்படிக்கும்
நான் செய்த பாவம் மன்னியும்

4   
நான் புதுப் பலத்துடனே
எழுந்து உம்மைப் போற்றவே
அயர்ந்த துயில் அருளும்
என் ஆவியை நீர் தேற்றிடும்

5   
நான் தூக்கமற்றிருக்கையில்
அசுத்த எண்ணம் மனதில்
அகற்றி திவ்விய சிந்தையே
எழுப்பிவிடும் கர்த்தரே

6   
பிதாவே என்றும் எனது
அடைக்கலம் நீர் உமது
முகத்தைக் காணும் காட்சியே
நித்தியானந்த முத்தியே

7   
அருளின் ஊற்றாம் ஸ்வாமியை
பிதா குமாரன் ஆவியை
துதியும் வான சேனையே
துதியும் மாந்தர் கூட்டமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!