இந்நாள் வரைக்கும் கர்த்தரே / Innaal Varaikkum Karththare
1
இந்நாள் வரைக்கும் கர்த்தரே
என்னைத் தற்காத்து வந்தீரே
உமக்குத் துதி ஸ்தோத்திரம்
செய்கின்றதே என் ஆத்துமம்
2
ராஜாக்களுக்கு ராஜாவே
உமது செட்டைகளிலே
என்னை அணைத்துச் சேர்த்திடும்
இரக்கமாகக் காத்திடும்
3
கர்த்தாவே இயேசு மூலமாய்
உம்மோடு சமாதானமாய்
அமர்ந்து தூங்கும்படிக்கும்
நான் செய்த பாவம் மன்னியும்
4
நான் புதுப் பலத்துடனே
எழுந்து உம்மைப் போற்றவே
அயர்ந்த துயில் அருளும்
என் ஆவியை நீர் தேற்றிடும்
5
நான் தூக்கமற்றிருக்கையில்
அசுத்த எண்ணம் மனதில்
அகற்றி திவ்விய சிந்தையே
எழுப்பிவிடும் கர்த்தரே
6
பிதாவே என்றும் எனது
அடைக்கலம் நீர் உமது
முகத்தைக் காணும் காட்சியே
நித்தியானந்த முத்தியே
7
அருளின் ஊற்றாம் ஸ்வாமியை
பிதா குமாரன் ஆவியை
துதியும் வான சேனையே
துதியும் மாந்தர் கூட்டமே