எப்போதும் இயேசு நாதா / Eppodhum Yesu Naadhaa / Eppothum Yesu Naathaa / Eppodhum Yesu Nadha / Eppothum Yesu Natha
1
எப்போதும் இயேசு நாதா
உம்மைப் பின்பற்றுவேன்
என்றே தீர்மானமாக
நான் வாக்குக் கொடுத்தேன்
நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்
அப்போது அஞ்சிடேன்
முன்சென்று பாதை காட்டும்
நான் வழி தவறேன்
2
பூலோக இன்பம் செல்வம்
வீண் ஆசாபாசத்தால்
என் ஆத்துமா மயங்காமல்
தெய்வீக பலத்தால்
நீர் துணைநின்று தாங்கும்
என் அருள் நாயகா
தீங்கணுகாமல் காரும்
மா வல்ல ரட்சகா
3
ஆங்காரம் சுய சித்தம்
தகாத சிந்தையால்
மா கலக்கம் உண்டாகி
நான் தடுமாறினால்
நீர் பேசும் அருள் நாதா
கொந்தளிப்படங்கும்
உம் நேச சத்தம் கேட்டு
என் ஆவி மகிழும்
4
பின்பற்றினால் விண் வீட்டில்
பேரின்பம் பெறுவீர்
என்றே உம் சீஷர் நோக்கி
நீர் வாக்கு அளித்தீர்
அவ்வருள் வாக்கை நம்பி
இவ்வேழை அடியேன்
“இதோ பின்செல்வேன்” என்று
பிரதிக்னை பண்ணினேன்
5
ஓயாமல் பெலன் தாரும்
உம்மடிச்சுவட்டில்
கால் வைத்து நடந்தேகி
நான் யாத்திரை செய்கையில்
நீர் வழி காட்டி என்னை
கைதாங்கி வருவீர்
அப்பாலே மோட்ச வீட்டில்
பேர் வாழ்வை அருள்வீர்
எப்போதும் இயேசு நாதா / Eppodhum Yesu Naadhaa / Eppothum Yesu Naathaa / Eppodhum Yesu Nadha / Eppothum Yesu Natha