பண்டிகைநாள் மகிழ்கொண்டாடுவோம் / Pandigai Naal Magilkondaaduvom / Pandigai Naal Magizhkondaaduvom / Pandigai Nal Magilkondaduvom / Pandigai Nal Magizhkondaduvom
பண்டிகைநாள் மகிழ்கொண்டாடுவோம் / Pandigai Naal Magilkondaaduvom / Pandigai Naal Magizhkondaaduvom / Pandigai Nal Magilkondaduvom / Pandigai Nal Magizhkondaduvom
1
பண்டிகைநாள் மகிழ்கொண்டாடுவோம்
வென்றுயிர்த்தோரைப் போற்றிப் பாடுவோம்
பண்டிகைநாள் மகிழ் கொண்டாடுவோம்
2
அருளாம் நாதர் உயிர்த்தெழும் காலம்
மரம் துளிர்விடும் நல் வசந்தம்
பண்டிகைநாள் மகிழ் கொண்டாடுவோம்
3
பூலோகெங்கும் நறுமலர் மணம்
மேலோகெங்கும் மின் ஜோதியின் மயம்
பண்டிகைநாள் மகிழ் கொண்டாடுவோம்
4
முளைத்துப் பூக்கும் பூண்டு புல்களும்
களிப்பாய் கர்த்தர் ஜெயித்தார் என்னும்
பண்டிகைநாள் மகிழ் கொண்டாடுவோம்
5
சாத்தான் தொலைந்ததால் விண்மன் ஜலம்
கீர்த்தனம் பாடிக் களிகூர்ந்திடும்
பண்டிகைநாள் மகிழ் கொண்டாடுவோம்
6
குருசில் தொங்கினோர் நம் கடவுள்
சிருஷ்டி நாம் தொழுவோம் வாருங்கள்
பண்டிகைநாள் மகிழ் கொண்டாடுவோம்
7
அநாதி நித்திய தெய்வ மைந்தனார்
மனுக்குலத்தை மீட்டு ரட்சித்தார்
பண்டிகைநாள் மகிழ் கொண்டாடுவோம்
8
நரரை மீட்க நரனாய் வந்தார்
நரகம் சாவு பேயையும் வென்றார்
பண்டிகைநாள் மகிழ் கொண்டாடுவோம்
9
பிதா சுதன் சுத்தாவிக்கென்றென்றும்
துதி புகழ் கனமும் ஏறிடும்
பண்டிகைநாள் மகிழ் கொண்டாடுவோம்