துயருற்ற வேந்தரே / Dhuyarutra Vendharae / Thuyarutra Vendharae
துயருற்ற வேந்தரே / Dhuyarutra Vendharae / Thuyarutra Vendharae
1
துயருற்ற வேந்தரே
சிலுவை ஆசனரே
நோவால் வாடும் முகத்தை
இருள் திரை மூடிற்றே
எண்ணிறைந்த துன்பம் நீர்
மௌனமாகச் சகித்தீர்
2
பலியாக மரிக்கும்
வேளை வரும் அளவும்
மூன்று மணி நேரமாய்
துணையின்றி மௌனமாய்
காரிருளில் தேவரீர்
பேயோடே போராடினீர்
3
தெய்வ ஏக மைந்தனார்
அபிஷேக நாதனார்
தேவனே என் தேவனே
எந்தனை ஏன் கைவிட்டீர்
என்றுரைக்கும் வாசகம்
கேள் இருண்ட ரகசியம்
4
துயர் திகில் இருண்டே
சூழும்போது தாசரை
கைவிடாதபடி நீர்
கைவிடப்பட்டிருந்தீர்
இக்கட்டில் சமீபம் நீர்
என்றிதாலே கற்பிப்பீர்
துயருற்ற வேந்தரே / Dhuyarutra Vendharae / Thuyarutra Vendharae