தீயோர் சொல்வதைக் கேளாமல் / Theeyor Solvadhai Kellaamal / Theeyor Solvathai Kellaamal / Theeyor Solvadhai Kellamal / Theeyor Solvathai Kellamal
தீயோர் சொல்வதைக் கேளாமல் / Theeyor Solvadhai Kellaamal / Theeyor Solvathai Kellaamal / Theeyor Solvadhai Kellamal / Theeyor Solvathai Kellamal
1
தீயோர் சொல்வதைக் கேளாமல்
பாவத்துக்கு விலகி
பரிகாசரைச் சேராமல்
நல்லோரோடு பழகி
கர்த்தர் தந்த வேதம் நம்பி
வாஞ்சை வைத்து அதைத்தான்
ராப்பகலும் ஓதும் ஞானி
என்றும் வாழும் பாக்யவான்
2
நதி ஓரத்தில் வாடாமல்
நடப்பட்டு வளர்ந்து
கனி தந்து உதிராமல்
இலை என்றும் பசந்து
காற்றைத் தாங்கும் மரம்போல
அசைவின்றியே நிற்பான்
அவன் செய்கை யாவும் வாய்க்க
ஆசீர்வாதம் பெறுவான்
3
தீயோர் பதர்போல் நில்லாமல்
தீர்ப்பு நாளில் விழுவார்
நீதிமான்களோடிராமல்
நாணி நைந்து அழிவார்
இங்கே பாவி மகிழ்ந்தாலும்
பாவபலம் நாசந்தான்
நீதிமான் இங்கழுதாலும்
கர்த்தர் வீட்டில் வாழுவான்