Tamil Christian Songs starting with கே

கேளாமல் போவாரோ | Kelamal Povaru / Kelamal Povaaru / Kelaamal Povaru / Kelaamal Povaaru

கண்மூடி துதித்தால்
கேளாமல் போவாரோ
இதயத்தை திறந்தால்
வராமல் நிற்பாரோ

முழங்கால்கள் முடங்கும்போது
தேற்றாமல் திரும்பிடுவாரோ
வாக்குரைத்த தேவன் அவர்
உன்னப்போல மாறிடுவாரோ

முழங்கால்கள் முடங்கும்போது
தேற்றாமல் திரும்பிடுவாரோ
வாக்குரைத்த தேவன் அவர்
உன்னப்போல மாறிடுவாரோ

கண்மூடி துதித்தால்
கேளாமல் போவாரோ
இதயத்தை திறந்தால்
வராமல் நிற்பாரோ

1
கண்ணோடு கண் வைத்து
கண்மணி போல் உன்னை காப்பவர் அன்றோ
நெஞ்சோடு உன்னை அணைத்து
ஆலோசனை என்றும் சொல்பவர் அன்றோ

கருவில் நீயும் வருமுன்னே
கருத்தாய் உன்னை அறிந்தவரோ
தாயின் கற்ப்பில் தோன்றுமுன்னே
உன் பேர் சொல்லி அழைத்தவரோ

கண்மூடி துதித்தால்
கேளாமல் போவாரோ
இதயத்தை திறந்தால்
வராமல் நிற்பாரோ

2
ஆறாத காயங்களை
ஆற்றும் நல்ல வைத்தியர் அன்றோ
மாறாத துன்ப வாழ்வுதனை
மாற்றும் நல்ல இரட்சகர் அன்றோ

அவர் சுவாசம் என்னில் உள்ளவரை
ஆலயமாக நானிருப்பேன்
அவர் அன்பை கற்று தந்ததினால்
அன்போடு வாழ்ந்திடுவேன்

கண்மூடி துதித்தால்
கேளாமல் போவாரோ
இதயத்தை திறந்தால்
வராமல் நிற்பாரோ

முழங்கால்கள் முடங்கும்போது
தேற்றாமல் திரும்பிடுவாரோ
வாக்குரைத்த தேவன் அவர்
உன்னப்போல மாறிடுவாரோ

முழங்கால்கள் முடங்கும்போது
தேற்றாமல் திரும்பிடுவாரோ
வாக்குரைத்த தேவன் அவர்
உன்னப்போல மாறிடுவாரோ

கண்மூடி துதித்தால்
கேளாமல் போவாரோ
இதயத்தை திறந்தால்
வராமல் நிற்பாரோ

கண்மூடி துதித்தால்
கேளாமல் போவாரோ
இதயத்தை திறந்தால்
வராமல் நிற்பாரோ

கேளாமல் போவாரோ | Kelamal Povaru / Kelamal Povaaru / Kelaamal Povaru / Kelaamal Povaaru | Jeyasingh Manuvel, Juvena

Don`t copy text!