ஆ இயேசுவே நான் பூமியில் / Aa Yesuve Naan Bhoomiyil / Aa Yesuvae Naan Bhoomiyil
ஆ இயேசுவே நான் பூமியில் / Aa Yesuve Naan Bhoomiyil / Aa Yesuvae Naan Bhoomiyil
1
ஆ இயேசுவே நான் பூமியில்
உயர்த்தப்பட்டிருக்கையில்
எல்லாரையும் என் பக்கமே
இழுத்துக்கொள்வேன் என்றீரே
2
அவ்வாறென்னை இழுக்கையில்
என் ஆசை கெட்ட லோகத்தில்
செல்லாமல் பாவத்தை விடும்
அநந்த நன்மைக்குட்படும்
3
தராதலத்தில் உம்முடன்
உபத்திரவப்படாதவன்
உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்
சகிப்பவன் சந்தோஷிப்பான்
4
பிதாவின் வீட்டில் தேவரீர்
ஸ்தலம் ஆயத்தம் செய்கிறீர்
அங்கே வசிக்கும் தூயவர்
இக்கட்டும் நோவும் அற்றவர்