அருளின் ஒளியைக் கண்டார் / Arullin Oliyai Kandaar / Arullin Oliyai Kandar / Arulin Oliyai Kandaar / Arulin Oliyai Kandar
1
அருளின் ஒளியைக் கண்டார்
இருளின் மாந்தரே
மருள் மரண மாந்தரில்
திரு ஒளி வீச
2
ஜாதிகளைத் திரளாக்கி
நீதி மகிழ்ச்சியால்
கோதில் அறுப்பில் மகிழ
ஜோதியாய்த் தோன்றினார்
3
கர்த்தன் பிறந்த பாலகன்
கர்த்தத்துவமுள்ளோன்
சுத்த அவரின் நாமமே
மெத்த அதிசயம்
4
ஆலோசனையின் கர்த்தனே
சாலவே வல்லோனே
பூலோக சமாதானமே
மேலோக தந்தையே
5
தாவீதின் சிங்காசனத்தை
மேவி நிலைகொள்ள
கூவி நியாயம் நீதியில்
ஏவி பலம் செய்வார்