கர்த்தாவே உம்மை ஸ்தோத்தரிப்பேன் / Karththave Ummai Sthoththaripen / Karthave Ummai Sthotharipen / கர்த்தாவே உம்மை தோத்தரிப்பேன் / Karththave Ummai Thoththaripen / Karthave Ummai Thotharipen
1
கர்த்தாவே உம்மைத் தோத்தரிப்பேன்
நீர் ஒருவர் பராபரனாமே
நான் உம்மையே நமஸ்கரிப்பேன்
என் வேண்டுதல் உம்மண்டை ஏறவே
நான் இயேசுவை முன்னிட்டுக் கூப்பிட
நீர் உமதாவியைத் தந்தருள
2
நான் இயேசு நாமத்தில் மன்றாட
அவரண்டை அடியேனை இழும்
நான் மண்ணை அல்ல விண்ணை நாட
தேய்வாவி என்னைப் போதிவிக்கவும்
நான் உமதன்பை ஆத்துமாத்திலே
ருசித்தும்மைத் துதிக்க கர்த்தரே
3
இத்தயவை என்மேலே வைப்பீர்
அப்போ நான் பாடும் கீதம் உத்தமம்
அப்போது நேர்த்தியாய் இசையும்
அப்போதென் வாயின் சொற்கள் சத்தியம்
அப்போதென் ஆவி தேவரீருக்கே
துதியுண்டாகக் கீதம் பாடுமே
4
அதேனெனில் சொற்கடங்காத
படியே என்னில் வேண்டிக் கொள்வாரே
நான் அவரால் தள்ளாடிடாத
மெய் விசுவாசமாய்த் தொழுவேனே
நற்சாட்சி அவரால் அடைகிறேன்
அத்தால் நான் பிள்ளைபோல் அப்பா என்பேன்
5
நான் அவர் ஏவுதலினாலே
இவ்விதமாய் விண்ணப்பம் பண்ணவே
அப்போதவர் ஒத்தாசையாலே
நான் உமக்கேற்க வேண்டினதற்கே
என் பரம பிதாவாம் தேவரீர்
ஆம் செய்வோம் என்றுத்தாரம் சொல்லுவீர்
6
நான் அவர் ஏவக் கேட்கும் யாவும்
தெய்வீக சித்தத்துக்கிசைந்தது
நான் இயேசு நாமத்தில் பிதாவும்
பராபரனுமான உமக்கு
முன்பாய் பணிகிறதினாலே நீர்
என் வேண்டுதலை அன்பாய்க் கேட்கிறீர்
7
நான் உம்முடைய பிள்ளை என்ற
நற்சாட்சி பெற்றதால் நான் பாக்கியன்
ஆகையினால் நான் வேண்டும் என்ற
எல்லா நல்லீவையும் அடைபவன்
நான் கேட்கிறதிலும் அதிகம்நீர்
இரக்கமாய்த் தந்தருளுகிறீர்
8
உம்மண்டை இயேசு எனக்காக
மன்றாடுகையினால் நான் பாக்கியன்
மெய்யான தெய்வப் பக்தியாக
நான் பண்ணிய ஜெபத்தின் நற்பலன்
அத்தாலே நிச்சயமாமே எல்லாம்
அவருக்குள்ளும் அவராலுமாம்