என்னுயிரே என்னுயிரே | Ennuyirae Ennuyirae / Ennuyire Ennuyire
என்னுயிரே என்னுயிரே
என் இதயத்தில் வாழ்பவரே
பேச்சினிலும் என் மூச்சினிலும்
நினைவிலும் கலந்தவரே
1
நான் விடும் மூச்சும் பொழுதெல்லாம்
இயேசு இயேசென்று சொல்லிடுதே
இராவிலும் பகலிலும் இருதயமும் என்
இயேசுவுக்காக துடிக்கிறதே
உள்ளமெல்லாம் உடலெல்லாம் உம்
நினைவாய் இருக்கின்றதே
என்னுயிரே என்னுயிரே
என் இதயத்தில் வாழ்பவரே
பேச்சினிலும் என் மூச்சினிலும்
நினைவிலும் கலந்தவரே
2
எனக்காகவே இரத்தம் சிந்தினீரே
எனக்காகவே மரித்துயிர்த்தீரே இந்த
செயலாலே என் இருதயத்தை
உம்மிலே பறிகொடுத்திட செய்தீரே
உம் அன்பாலே நான் மயங்கி
உம்மை நேசிக்க துணிந்தேனே
என்னுயிரே என்னுயிரே
என் இதயத்தில் வாழ்பவரே
பேச்சினிலும் என் மூச்சினிலும்
நினைவிலும் கலந்தவரே
3
இருளாய் கிடந்த தேகமெல்லாம்
தேவ ஆலயம் ஆகினதே இனி
நானும் எனக்கு சொந்தமல்ல
எனதெல்லாமே இனி உம் சொந்தமே
இதயத்திலேயும் உம்மை தவிர
வேறு எவருக்கும் இடமில்லையே
என்னுயிரே என்னுயிரே
என் இதயத்தில் வாழ்பவரே
பேச்சினிலும் என் மூச்சினிலும்
நினைவிலும் கலந்தவரே
என்னுயிரே என்னுயிரே | Ennuyirae Ennuyirae / Ennuyire Ennuyire | SJC Selvakumar / Messia Ministries
