Tamil Christian Song Book Menu – Tamil

துன்பமான வேளையில் / Dhunbamaana Velayil / Thunbamaana Velayil / Thunbamana Velayil

துன்பமான வேளையில் இன்பமான வேளையில்
கஷ்டமான பாதையில் களிப்பான நேரத்தில்
என் இயேசு என்னோடு இருக்கின்றாரே
அவரே என் கன்மலை என் கோட்டையுமானார்

எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே

நான் நம்பும் கன்மலை என்றுமே
அவரை நான் சார்ந்திடுவேன்
அவரை நான் என்றும் சார்ந்திடுவேன்
 
1
கலங்கின வேளையில் கண்ணீரின் மத்தியில்
வியாதியின் பாதையில் புலம்பலின் நேரத்தில்
அழாதே என் மகனே உன்னை விடுவிப்பாரே
நீ நம்பும் தேவன் உன்னை கைவிடாரே
 
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே

நான் நம்பும் கன்மலை என்றுமே
அவரை நான் சார்ந்திடுவேன்
அவரை நான் என்றும் சார்ந்திடுவேன்

2
ஊழியப்பாதையில் சோர்வான நேரத்தில்
பணக்கஷ்டம் வந்தாலும் சபை வளராவிட்டாலும்
திடன்கொள் மனமே கலங்கிடாதே
உன்னை அழைத்தவர் உன்னை காத்திடுவார்
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே

நான் நம்பும் கன்மலை என்றுமே
அவரை நான் சார்ந்திடுவேன்
அவரை நான் என்றும் சார்ந்திடுவேன்

Don`t copy text!